திருக்குறள்

1139.

அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம் மறுகின் மறுகும் மருண்டு.

திருக்குறள் 1139

அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம் மறுகின் மறுகும் மருண்டு.

பொருள்:

என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!.

மு.வரததாசனார் உரை:

அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:

என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.